search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சிலுவைநாதர்"

    • பெருவிழா மாலை ஆராதனை, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.
    • மகிமைப் பெரு விழாவையொட்டி நெல்லை, தூத்குக்குடி தென்காசி, குமரி, விருதுநகர், மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் ஆலயம் 3 பக்கம் கடல் நடுவினிலே இயற்கையாக அமைந்துள்ளது.

    திருவிழா

    இந்த ஆண்டு ஆலயத்தின் 443-வது திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும் தொடர்ந்து காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜாண் செல்வம் தலைமையில் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது.

    பங்கு தந்தையர்கள் மனோ, ஜாண் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்பங்கு தந்தையர்கள் டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன், மணப்பாடு ஊராட்சி தலைவர் கிரேன் சிட்டா, துணைத் தலைவர் கொலின் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலையில்பங்கு தந்தையர்கள் சுசீலன், ததேயுஸ் ராஜன், ஷிபாகர், விக்டர், லோபோ, சதீஸ்குமார், ஜெயக்குமார், ஜாண்சுரேஷ் ஆகியோர் மறையுரை நிகழ்த்தினர், பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கலைநிகழ்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 8.30 மணிக்கு மணவை மக்கள் சார்பில் திருப்பலியும், தொடர்ந்து திவ்விய 5 திருக்காய சபையின் பொறுப்பாளர் தேர்வும், மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆயருக்கு பங்கு மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில்நடந்தது.

    திருப்பலி

    இன்று காலை திருச்சிலுவை மகிமைப் பெரு விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயம் மற்றும் திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், காலை 5 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு திருத்தலத்தில்ஆயர் நசரேன் சூசை பெரும் விழா திருப்பலி, 5 திருக்காய சபையின் பொறுப்பாளர் நியமனம், மெய்யான திருச்சிலுவைஆசீர் நடந்தது.

    சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏராளமான திருத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், பங்கு பாதிரியார்கள், பங்கு மக்கள் உட்பட பல்லாயிர கணக்கான இறை–மக்கள்கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலி நடக்கிறது.

    மகிமைப் பெரு விழாவையொட்டி நேற்றும் இன்றும்நெல்லை, தூத்துக்குடி தென்காசி, குமரி, விருதுநகர், மாவட்டங்களில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கேரளாவில் இருந்து குடும்பத்துடன் மக்கள் குவிந்துள்ளனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் லெரின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ், அருட் சகோதரர் ரஷ்யன், அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நலக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    ×