என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருச்சி ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "திருச்சி ஆர்ப்பாட்டம்"
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
மின்சார சட்டத்திருத்த மசோதா 2021 ஐ திரும்பப் பெற வேண்டும், 3 வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தின் மூலம் திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்.
வங்கி, இன்சூரன்ஸ், மின்வாரியம், போக்குவரத்து, நிலக்கரி, ரெயில்வே, விமானம், பெல் மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியாருக்குதாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொ.மு.ச. திட்ட செயலாளர் தியாகராஜன், ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டசெயலாளர் செல்வராஜ், பொறியாளர் கழக மண்டல செயலாளர் விக்ரமன், இன்ஜினியர் சங்க ராஜேஷ், எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் திட்டசெயலாளர் சிவசெல்வன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X