search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகராஜ பாகவதர்"

    தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கம்மாளர்கள் கூட்டமைப்பு தீர்மானம் அளி்த்துள்ளது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கம்மாளர்களின் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்   முத்தையா ஆச்சாரி தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர்  ஜம்புகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திருச்சியில் கட்டப்பட்டு வரும் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்ற இட ஒதுக்கீடுகளில் விஸ்வகர்ம சங்கத்தினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்,  விஸ்வகர்ம சங்கத்தினர் ஐந்தொழில் புரிவோருக்கு என தனி வாரியம் அமைத்து அதில் விஸ்வகர்ம இனத்தைச் சேர்ந்தவர்களை தலைவராக நியமிக்க வேண்டும், தமிழகத்தில் திருக்கோயில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர் குழுக்களில் விஸ்வகர்ம சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   

    மாநில அவைத் தலைவர் கதிரேசன்,  மாநில பொருளாளர் சாந்தி, ஓய்வு பெற்ற காவல்துறை சார்பில் முத்துராமலிங்கம், தலைமைச் செயலாளர் ராஜேந்திரன் ஆச்சாரி உள்பட பலர் பேசினர்.  ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார். கூட்டத்தில்  தியாகராஜ பாகதவரின் நினைவு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
    ×