என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டமைப்பு"

    • கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மகுடம் சக்தி, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையம் டிராய் அமைப்பு என்.டி.ஓ.3 பரிந்துரையின் பேரில் கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கேபிள் டி.வி.கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்களும், கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தலையிட்டு என்.டி.ஓ.3 பரிந்துரையை நிறுத்திவைத்து கேபிள் டி.வி.கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் இந்திய தொலைதொடர்பு ஆணையம் கொண்டுவரும் பரிந்துரையை பொதுமக்களும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா? என்று மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி நலவாரியம் அறிவித்திட வேண்டும், அரசு கேபிள் அனலாக் நிலுவை தட வாடகை குறித்து கூட்ட மைப்பு தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    • ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மனு
    • 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 51 பேரூராட்சிகளில் 46 பேரூராட்சி தலைவர்கள் சேர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் டெண்டரை ரத்து செய்ய வேண்டும், அமர்வுப்படி உயர்த்தி தர வேண்டும், உள் குடிநீர் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து ரூ.10 லட்சம் வரை தளர்வு தரப்படும் என்றும், பேரூராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி ரூ.10 ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் தருவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததாக பேரூராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சி கூட்டமைப்புகளின் தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜாண் டென்சிங், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, நல்லூர் பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் உட்பட 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கம்மாளர்கள் கூட்டமைப்பு தீர்மானம் அளி்த்துள்ளது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கம்மாளர்களின் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்   முத்தையா ஆச்சாரி தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர்  ஜம்புகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திருச்சியில் கட்டப்பட்டு வரும் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்ற இட ஒதுக்கீடுகளில் விஸ்வகர்ம சங்கத்தினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்,  விஸ்வகர்ம சங்கத்தினர் ஐந்தொழில் புரிவோருக்கு என தனி வாரியம் அமைத்து அதில் விஸ்வகர்ம இனத்தைச் சேர்ந்தவர்களை தலைவராக நியமிக்க வேண்டும், தமிழகத்தில் திருக்கோயில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர் குழுக்களில் விஸ்வகர்ம சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   

    மாநில அவைத் தலைவர் கதிரேசன்,  மாநில பொருளாளர் சாந்தி, ஓய்வு பெற்ற காவல்துறை சார்பில் முத்துராமலிங்கம், தலைமைச் செயலாளர் ராஜேந்திரன் ஆச்சாரி உள்பட பலர் பேசினர்.  ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார். கூட்டத்தில்  தியாகராஜ பாகதவரின் நினைவு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
    ×