search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட மருத்துவ முகாம்"

    • ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.
    • உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் 1996 ம் ஆண்டு 4-வது முறையாக பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருந்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.

    நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று இந்த முகாம் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றார்.

    இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு த்தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    • பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர்.
    • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினி கிராமம், வரதப்பம்பாளையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான இலவச சிறப்பு மருத்துவ முகாமினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களுக்கும் மருந்து பெட்டகங்களையும் 60 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கே வந்து வழங்கப்படுகிறது.

    கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்களில் குறைபாடு இருந்தால் கண் பரிசோதனை செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு முக்கு கண்ணாடி மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் முரளி, மாவட்ட ஊராட்சி கிருஷ்ணவேணி வரதராஜ், காங்கேயம் ஊராட்சி தலைவர் மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×