search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் மாயம்"

    • காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • இதையடுத்து பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வண்டிபட்டி, அத்தாணி ரோட்டை சேர்ந்தவர் மல்லேஸ்வரன்(45). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.

    இதில் 3-வது மகள் இந்துமதி (21). கோவையில் நர்சிங் பயிற்சி முடித்து விட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

    தினமும் காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு செல்பவர் மாலை வீட்டுக்கு வந்து விடுவார். இதேபோல் சம்பவத்தன்றும் காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் இந்து மதியை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் பணிபுரிந்த மருத்துவமனை, நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து இந்துமதியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர். புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் 2 பேர் திடீர் மாயமானார்.
    • ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர்.

    கடலூர்:

     பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). இவரது மனைவி அமுதா (42). இருவருக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சிவக்குமார் சலூன் கடைக்கு சென்று வருகிறேன், என்று கூறிவிட்டு சென்ற வர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சிவக்குமார் தாய்ஜெயகாந்தி முத்தாண் டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

    இதனிடையே ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கடைசி மகனான சுரேஷ்குமார் மாயமானார். இதுகுறித்து தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

    ×