search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. ம.தி.மு.க."

    • தி.மு.க. சார்பில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், விநாயகா ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    கோவில்பட்டி:

    பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், நெசவாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் கணேசன், செல்வ மணிகண்டன், தாமோதரக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், நிர்வாகிகள் முத்துசெல்வம், கணேசன், நகர செயலாளர் பால்ராஜ், இளைஞர் அணி செயலாளர் முத்து கிருஷ்ணன், முத்துப்பாண்டி, நாகராஜ், செண்பகராஜ், கோடையிடி ராமச்சந்திரன், சிவராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான ம.தி.மு.கவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    ×