search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. கொடி"

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு ஏற்பாடு
    • அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி. வருகை எதிரொலி

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வ ரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, கொட்டா ரம் பேரூராட்சி தலைவி செல்வ கனி, ஒன்றிய துணை செயலா ளர்கள் பாலசுப்பிரமணியம், பிரேமலதா, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்டபெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், தமிழ்மாறன், வினோத், ஒன்றிய பிரதிநிதி மரியநேசன், ஒன்றிய தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் தமிழன் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோ வில் வடசேரி வஞ்சி யாதித்தன் புதுத்தெருவில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்ச கன் எம்.பி. ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வருகிறார்கள்.

    பின்னர் அவர்கள் அங்கு இருந்து கார் மூலமாக புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெற்கு ஒன்றிய எல்லை பகுதிகளான சுசீந்திரத்தில் இருந்து பொற்றையடி, அச்சன்குளம், கொட்டாரம், பெருமாள்புரம், மகாதான புரம் ரவுண்டானா சந்திப்பு, கன்னியாகுமரி வரையிலும், வட்டக்கோட் டையில் இருந்து லீபுரம், பஞ்ச லிங்கபுரம், விவே கானந்தபுரம், கன்னியாகுமரி வரையிலும் சாலையின் இருபுறமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு செய்துள்ளார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடி பறக்க விடப்பட்டு உள்ளது. இது தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மழையையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்தார்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதற்காக நேற்று இரவு வேலூரில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூட்டுத்தாக்கு அருகில் கட்டப்பட்டுள்ள சிஎம்சி மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இரவு ராணிப்பேட்டைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.அவருக்கு அமைச்சர் காந்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது லேசான மழை தூரல் இருந்தது.அதையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்து ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் வாழ்த்து கோ–சங்களை எழுப்பினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தி, திமுக மாநில சுற்றுலா செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவன, நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், அப்துல்லா மற்றும் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    ×