search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் மாயம்"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரூபா தேவி (வயது26). இவர்களது ஒன்றரை வயது மகள் ஏஞ்சல்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கார்த்திக் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என தாயிடம் வற்புறுத்தி உள்ளார்.
    • ஆத்திரமடைந்த செந்தில், தாய் சந்திராவை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி உள்ளார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அப்பு கவுண்டர். இவரது மனைவி சந்திரா (வயது65). இவருக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் மகன் செந்தில் தனது தாய் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். இதற்கு சந்திரா மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த செந்தில், தாய் சந்திராவை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சந்திரா வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து செந்தில் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திராவை தேடி வருகின்றனர்.

    ×