search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் மாயம்"

    • கிருஷ்ணகிரி அருகே 2 மகன்களுடன் தாய் மாயம் ஆனார்.
    • போலீசார் விசாரணை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சையதுல்லா (வயது 43) இவரது மனைவி பூஜீயா(38) இவர்களுக்கு 12 வயதில் மற்றும் 7 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். சையதுல்லா அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பூஜீயாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ந் தேதி தனது இரு மகன்களை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்லவில்லை. பூஜீயா மற்றும் 2 மகன்கள் குறித்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சையதுல்லா அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு மகன்களுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.  

    • சத்யராஜ் தனது மனைவியை கண்டித்து அவரை குழந்தை களுடன் ஏரியூரில் கொண்டு வந்து விட்டார்.
    • பதறிப்போன அவர் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    கு தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பட்டகாரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது35). இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கட்டிட மேஸ்திரியான சத்யராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு ரோஜாவுக்கும், பழனி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து சத்யராஜ் தனது மனைவியை கண்டித்து அவரை குழந்தைகளுடன் ஏரியூரில் கொண்டு வந்து விட்டார். இந்த நிலையில் சத்யராஜ் சம்பவத்தன்று வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டு ஏரியூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது 4 குழந்தைகள் மட்டும் இருந்தனர். தனது மனைவியை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் ரோஜா கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து சத்யராஜ் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் இருந்த 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து விட்டார்.
    • தமிழரசி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏ.கோடுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது55). இவரது மகள் தமிழரசி (25). இவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இதில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வீட்டினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு எடப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் இருந்த 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து விட்டார்.

    இதனால் மனவேதனையில் இருந்த தமிழரசி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பழனி தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து பழனி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.

    • மீண்டும் வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் காணவில்லை.
    • பதறிப்போன பசுபதி அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அனுமந்தபுரம் முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி செவ்வந்தி (வயது30). இவர்களுக்கு கவியரசு (10) என்ற மகனும், காவ்யா (7), நதியா (5) என்ற மகள்களும் உள்ளனர். இதில் கவியரசு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், காவ்யா 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பசுபதி தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது செவந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் அவர் தனது மனைவியை திட்டியுள்ளார். பின்னர் அவர் மீண்டும் வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் காணவில்லை.

    இதனால் பதறிப்போன பசுபதி அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான செவ்வந்தியை தேடிவருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • மனமுடைந்து காணப்பட்ட மகாலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள சேசம்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதா. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சர்வேஷ், பிரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மகாலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.

    இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த தீபா தனது 3 வயது மகனுடன் வெளியே சென்றார்.
    • பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    நாமக்கல், ஏப்.17-

    நாமக்கல் ரெட்டிப்பட்டி சாலபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி தீபா (வயது 30). இவர்களுக்கு கதிர் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த தீபா தனது 3 வயது மகனுடன் வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபா மற்றும் அவரது மகன் கதிர் ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    • தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சீத்தாலட்சுமி (வயது 45).
    • இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சீத்தாலட்சுமி (வயது 45). இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கண்ணதாசன் மகன் ஆனந்தராஜ் (23) கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பி. கஸ்பா பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பிரியா ஆம்பூர் பஜார் பகுதியில் துணி கடையில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரியா கடந்த 16-ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் பல்வேறு இடங்களில் மனைவியை தேடி உள்ளார்.

    அவர் கிடைக்காததால் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து,
    • ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு டோல்கேட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். குழந்தைகள் 2 பேரும் வெள்ளலூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி ரேவதி தனது கணவர் பன்னீர்செல்வத்திடம், இரண்டாவது மகள் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வென்றதாகவும், அதற்கான பரிசினை சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி கொண்டு, 2 குழந்தைகளையும் அழைத்து சென்னைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பன்னீர்செல்வம் தனது மனைவி ரேவதியை தொலைபேசியில் அழைத்தார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரேவதி மற்றும் அவரது 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    • ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி
    • கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

    ஆலங்குளம்:

    வீ.கே.புதூர் அருகே உள்ள ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மகாதேவி (வயது25). இவர்களுக்கு சுதர்சன் (2½) என்ற மகனும் 10 மாதத்தில் இசையரசி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் திடீரென மகாதேவி மற்றும் 2 குழந்தைகள் மாயமாகினர்.

    இது தொடர்பாக சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூரில் உள்ள மகாதேவியின் தந்தை பேச்சுமுத்து வீ.கே.புதூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்ற ராமாத்தாள் அதன்பின் வீடு திரும்பவில்லை.
    • இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமாத்தாளை தேடி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவரது தாய் ராமாத்தாள் (55). ராமாத்தாளின் இளைய மகன் மணிகண்டன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார்.

    அதன் காரணமாக ராமாத்தாள் சற்று மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

    உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ராமாத்தாள் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமாத்தாளை தேடி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
    • ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை.
    • தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    தக்கலை, அக்.20-

    தக்கலை அருகே துரப்பு திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது36), இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு ரிஷி (10) மற்றும் ரிக்ஷானா (8) என 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 5-ம் வகுப்பும், மகள் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தார். காணாததால் நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    ×