2 மகன்களுடன் தாய் மாயம்

கிருஷ்ணகிரி அருகே 2 மகன்களுடன் தாய் மாயம் ஆனார்.போலீசார் விசாரணை.
2 மகன்களுடன் தாய் மாயம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சையதுல்லா (வயது 43) இவரது மனைவி பூஜீயா(38) இவர்களுக்கு 12 வயதில் மற்றும் 7 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். சையதுல்லா அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி பூஜீயாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ந் தேதி தனது இரு மகன்களை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்லவில்லை. பூஜீயா மற்றும் 2 மகன்கள் குறித்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சையதுல்லா அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு மகன்களுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com