search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில்  2 குழந்தைகளுடன் தாய் மாயம்  கணவர் கண்ணீர் புகார்
    X

    தக்கலையில் 2 குழந்தைகளுடன் தாய் மாயம் கணவர் கண்ணீர் புகார்

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
    • ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை.
    • தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    தக்கலை, அக்.20-

    தக்கலை அருகே துரப்பு திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது36), இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு ரிஷி (10) மற்றும் ரிக்ஷானா (8) என 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 5-ம் வகுப்பும், மகள் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தார். காணாததால் நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×