என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீ.கே.புதூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
- ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி
- கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
ஆலங்குளம்:
வீ.கே.புதூர் அருகே உள்ள ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி.
இவரது மனைவி மகாதேவி (வயது25). இவர்களுக்கு சுதர்சன் (2½) என்ற மகனும் 10 மாதத்தில் இசையரசி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் திடீரென மகாதேவி மற்றும் 2 குழந்தைகள் மாயமாகினர்.
இது தொடர்பாக சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூரில் உள்ள மகாதேவியின் தந்தை பேச்சுமுத்து வீ.கே.புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story






