search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother magic"

    • கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த தீபா தனது 3 வயது மகனுடன் வெளியே சென்றார்.
    • பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    நாமக்கல், ஏப்.17-

    நாமக்கல் ரெட்டிப்பட்டி சாலபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி தீபா (வயது 30). இவர்களுக்கு கதிர் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த தீபா தனது 3 வயது மகனுடன் வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபா மற்றும் அவரது மகன் கதிர் ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    ×