என் மலர்
நீங்கள் தேடியது "மகன் புகார்"
- சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்ற ராமாத்தாள் அதன்பின் வீடு திரும்பவில்லை.
- இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமாத்தாளை தேடி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவரது தாய் ராமாத்தாள் (55). ராமாத்தாளின் இளைய மகன் மணிகண்டன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார்.
அதன் காரணமாக ராமாத்தாள் சற்று மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ராமாத்தாள் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமாத்தாளை தேடி வருகின்றனர்.






