search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி எக்ஸ்பிரஸ்"

    • செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் இல்லை என்ற ரெயில் பயணிகளின் புகாரை நிவர்த்தி செய்யும் வகையில் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

    இந்த ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர், ரெயில் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் வாரத்திற்கு 3 முறை இந்த ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இதில் 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    • தற்போது தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • புதிதாக இயங்க இருக்கும் ரெயிலானது 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி இடையே 21.9.2012 அன்று மீட்டர் கேஜ் பாதையானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேரடி ரெயில் இல்லை

    இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.

    பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக தற்போது நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை பயன்படுத்தி தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    13 மணி நேர பயணம்

    இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு நிரந்தர ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பொதிகை செங்கோட்டை - தாம்பரம் இடையே மதுரை வழியாக 10 மணி 30 நிமிடத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் 11 மணி நேரத்திலும் கடக்கின்றன.

    புதிதாக இயங்க இருக்கும் செங்கோட்டை - தாம்பரம் மும்முறை ரெயிலானது பாவூர்சத்திரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், விழுப்புரம் வழியாக 766 கிலோமீட்டர் தூரத்தை 60 கிலோமீட்டர் வேகத்துடன் 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

    தாமிரபரணி எக்ஸ்பிரஸ்

    செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையு மாறும், தாம்பரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையிலும் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

    பிரதமர் மோடி கொடி யசைத்து தொடங்கிவைக்க உள்ள இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×