search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை செய்த கல்லூரி மாணவர்"

    • தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் தயானந்தன் (20). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தயானந்தன் தங்கி இருக்கும் வீட்டின் உறவினரான யுவராஜ் என்பவரின் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தயானந்தன் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக காண்பித்து உள்ளது. உடனே யுவராஜ் தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தயானந்தன் இருந்த வீட்டின் அறை கதவை தட்டி உள்ளனர்.

    கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் ஜன்னல் வழியே பார்த்த போது தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உறவினர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து தயானந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்து வந்த தயானந்தன் வாழ பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ×