search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சிறைச்சாலைகள்"

    • சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சிறை பஜார் 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இயற்கை உணவுகள் தரமான செக்கு எண்ணெய் வகைகள், படுக்கை விரிப்புகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புழல் மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட அனைத்து சிறைகளின் முன்பும் இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை துறை சார்பில் கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதை சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி தெரிவித்து உள்ளார். இதற்கான நடவடிக்கைகளில் சிறை துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறை பஜார் 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை, சேலம், திருச்சி, கடலூர், மதுரை, வேலூர், பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய சிறைகளிலும் சென்னையில் புழல் சிறை எண்.1 மற்றும் 2 மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் கிடைக்கும் லாபத்தில் கைதிகளுக்கு 20 சதவீதமும் அரசுக்கு 20 சதவீதமும், சிறை ஊழியர்கள் நலனுக்கு 20 சதவீதமும் பொருட்கள் தயாரிப்பு நிதிக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×