search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர் சாவு"

    • சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அங்கேரி கொங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கெடியரசன் (வயது 36). இவர் சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கழுத்து தலை உள்பட பல பகுதிகளில் படு காயம் அடைந்த அவரை ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கொடியரசன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து அவரது மனைவி கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ×