என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் அருகேமாடியில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
- சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அங்கேரி கொங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கெடியரசன் (வயது 36). இவர் சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கழுத்து தலை உள்பட பல பகுதிகளில் படு காயம் அடைந்த அவரை ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கொடியரசன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து அவரது மனைவி கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்