என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனிப்படை அமைத்து"
- கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
- தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கந்தசாமிபாளையம் நெடுங்காட்டு தோட்டம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (85). இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்கள் அந்த பகு தியில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் சுப்பிரமணியும், கண்ணம்மாளும் இருந்தனர். அப்போது முக மூடி அணிந்த ஆசாமிகள் 3 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே புகுந்தனர்.
இதையடுத்து அவர்களி டம் முகமூடி ஆசாமிகள் நகை, பணத்தை தருமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முகமூடி ஆசாமிகள் கணவன், மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் செய்வது அறியாமல் கண்ணம்மாள் தனது கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தாலிசங்கிலியை கழற்றி கொடுத்தார்.
பின்னர் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தையும் எடுத்து கொடுத்தார். இதையடுத்து கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்க ளுடைய மகன் ஆனந்தன் ஆகியோர் அங்கு சென்று கதவை திறந்து பெற் றோரை மீட்டார்.
இது குறித்து ஆனந்தன் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் சாமிநாதபுரம் பஸ் நிறுத் தத்தில் சந்தேகத்துக்கிடமான 3 மர்ம நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சுப் பிரமணியின் தோட்டத்து வீட்டை நோக்கி சென்றதும், அதே நபர்கள் இரவு 9 மணி அளவில் அதே பஸ் நிறுத்தம் 2 சென்று பஸ்சில் ஏறி சென்ற தும் தெரியவந்தது.
எனவே அவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என்று கூறப்படுகிறது. தகவல் கிடைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாவையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா க்களையும் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்