search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனபாலன்"

    • எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரமும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
    • தமிழகத்தில் நல்லாட்சி நடை பெறுவதற்கான காலம் நெருங்கி வருகிறது.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும்.

    எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நியாயமும், தர்மமும் இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும், தேர்தல் கமிஷனும் அங்கீகரித்து விட்டனர். இதனால் அ.தி.மு.க. கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை நிர்வாகிக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரமும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி நடை பெறுவதற்கான காலம் நெருங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×