search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டனை"

    • கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.
    • தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற சத்யராஜ் வயது 34. இவர் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் மாயனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சுரேஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நிலையில் சுரேஷ் கடந்த 17.4.2014 ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டு மூன்று ஆயுதப்படை காவலர்கள் வழி காவலாக நியமிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    இதை அடுத்து வழி காவலர்களாக வந்த அந்த மூன்று ஆயுதப்படை காவலர்களும் இது பற்றி மதுக்கூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதை அடுத்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஆயுள் தண்டனை கைதி தப்பித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியை பக்கத்து வீட்டு தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
    • சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் (5) சரிவர வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டி வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார்.

    வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியின் நிலையை பக்கத்து வீட்டு நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறுமி வெயிலில் துடிக்கும் வீடியோவைக் கண்டு சிறுமியின் தாயை மக்கள் திட்டி தீர்க்கின்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டு பாடம் செய்யாததால் பெற்ற பிள்ளைக்கே கொடூர தண்டனை வழங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×