search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு நடவடிக்கைகள்"

    • மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது .
    • மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பூர்,ஏப்.27-

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமை ப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது . இதன் மூலம் தொற்று பரவல் சதவீதத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதனால் வேலை தேடி வெளிமாநிலத்தில் இருந்து பலர் திருப்பூர் வருவதாலும், பலர் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்வதாலும் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.

    இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடி க்கைகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ள்ளனர். மேலும் வெளி யிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காப்பு க்காட்டில், 130 ஹெக்டேரில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
    • காடுகளில் அடர்த்தி அதிகரிக்க, 76 லட்சத்து, 64 ரூபாய் மதிப்பில், 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    வனத்தில் இருந்து யானைகள் வெளியேறு வதை தடுக்க, 2 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு உள்ளது என, தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    தருமபுரி மாவட்ட வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வனவிலங்குள், மனித மோதலை தடுக்க வும், விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும், வன விலங்குகளை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இதன் படி காப்பு க்காட்டில், 130 ஹெக்டேரில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க, 39 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய யானை தாண்டா அகழி, 5 கி.மீ., துாரத்துக்கு அமைக்கவும், ஏற்கனவே உள்ள அகழிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய தரம் குன்றி காடுகளில் அடர்த்தி அதிகரிக்க, 76 லட்சத்து, 64 ரூபாய் மதிப்பில், 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், 26 லட்ச ரூபாய் மதிப்பில் சோலார் மின்வசதியுடன் ஆழ்துளை கிணறு மற்றும் அகலி அமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம், 2 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×