search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடிக்காரன்கோணம்"

    • நாட்டு துப்பாக்கி - கார் பறிமுதல்
    • சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சியை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    நாகர்கோவில்:

    அழகியபாண்டியபுரம் வனச்சரகம் தடிக்காரன்கோ ணம் அருகே பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் தோட் டத்தில் மிளா வேட்டை யாடப்படுவதாக மாவட்ட வன அதிகாரி இளைய ராஜாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். அதன் பேரில் உதவி வன அதிகாரி சிவகுமார் தலைமையில் வனவர்கள் பிரபு, பிரவீன் மற்றும் வன ஊழியர்கள் சரவணன், வேல்முருகன், சுரேஷ், பென்சாம், பிரபு சிங், பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தடிக் காரன்கோணம் வனப்பகுதி வீரப்புலியில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மிளா இறைச் சியை சமையலுக்கு தயார் செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

    இதைப்பார்த்த அதிகா ரிகள் உடனே வீட்டின் உரிமை யாளரான மனக்கா விளையை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது ராஜேஷ் குமார் மற்றும் தடிக்காரன் கோணத்தை சேர்ந்த ஜெகன் (29), ஜோஸ் மற்றும் சிவராஜன் ஆகியோர் சேர்ந்து மிளாவை வேட்டை யாடியது தெரியவந்தது.

    வனத்துறையினர் ராஜேஷ்குமார் மற்றும் ஜெகன் இருவரையும் கைது செய்தனர். ஜோஸ், சிவராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மிளாவை வேட்டையாட பயன்படுத்திய ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சி ஆகிய வற்றை வனத்துறை அதிகாரி கள் கைப்பற்றினர்.

    இதுபற்றி உதவி வன அதிகாரி சிவகுமார் கூறியதாவது:-

    மிளா வேட்டையாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்னொரு நாட்டு துப்பாக்கி தலைமறைவாக உள்ளவர்களிடம் உள்ளது. இந்த மிளா வேட்டையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×