search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி சான்றிதழ்கள்"

    • மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏர்வாய்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் 206 ஆண்களும், 115 பெண்களும் என மொத்தம் 321 பேர் பங்கேற்றனர்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.4000-ம், 2-வது பரிசாக ரூ.3000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம், 4-ம் பரிசாக ரூ.1000-ம், 5-ம் பரிசாக ரூ.1000.ம், 6 மற்றும் 7-ம் பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு நெகிழி பயன்பாடு தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது மீண்டும் மஞ்சள்பை இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குநர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி சுற்றுச்சூழல்த்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    ×