என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டைரக்டர் பா ரஞ்சித்"
- விடுதலை சிகப்பிக்கு தண்டனை வாங்கி தர உயர்நீதிமன்றத்துக்கு பாரத் இந்து முன்னணி சென்று போராடும்.
- டைரக்டர் ரஞ்சித் உதவியாளர் செய்த தவறை திசை திருப்பும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும்.
சென்னை:
பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டைரக்டர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் விடுதலை சிகப்பி என்பவர் ராமர் சீதா தேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோர் பற்றி அவதூறாக கவிதை படித்தது தொடர்பாக பாரத் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து கடவுள்களை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று மீண்டும், மீண்டும் அவர்கள் பேசுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
விடுதலை சிகப்பிக்கு தண்டனை வாங்கி தர உயர்நீதிமன்றத்துக்கு பாரத் இந்து முன்னணி சென்று போராடும்.
டைரக்டர் ரஞ்சித் உதவியாளர் செய்த தவறை திசை திருப்பும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் டைரக்டர் ரஞ்சித் அலுவலகம் முன்பு பாரத் இந்து முன்னணி சார்பில் ஸ்ரீராம நாம பஜனைகளுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்