search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.எஸ்.பி. அறிவுரை"

    • விதிமுைறகளை கடைபிடிக்க வலியுறுத்தல்
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை

    செய்யாறு:

    செய்யாறு டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ராம்குமார், அரசு உள்படபோலீசார் நேற்று ஆற்காடு சாலை அண்ணா சிலை அருகே, மற்றும் ஆரணி கூட்ரோட்டில் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், 18 வயதுக்கு கீழ் வண்டி ஓட்டும் மாணவ மாணவிகள், குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், போன்ற போக்குவரத்து விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகளான அனைவரையும் நிறுத்தி அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனத்திற்குரிய உரிய ஆவணங்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.

    • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன.
    • மில் நிர்வாகி களிடம் வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் புரோக்கர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ள–னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்ல மறுத்த 2 வட மாநில பெண்களை புரோக்கர் அறையில் பூட்டி சித்ரவதை செய்தார். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இளம்பெண்க ளை மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் ஒரு தம்பதியை மில் வேலைக்கு அழைத்து வந்து கோழிப்பண்ணையில் பணியமர்த்தியதால் அவர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். இதனால் புரோக்கர் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேடசந்தூருக்கு டி.எஸ்.பி. துர்காதேவி புதிதாக பதவியேற்றுள்ளார். அவர் வடமாநில தொழிலாளர்கள் புரோக்கர்களிடம் சிக்கி அவதிப்படுவதை அறிந்து மில் நிர்வாகிகளுடன் ஆலோ சனை கூட்டம் நடத்தினார்.

    இதில் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பாண்டியன், வேல்ராஜ், வேல்மணி, ஆகியோர் மில் நிர்வாகி களிடம் வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

    ×