search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிடர் கரு.கருப்பையா"

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் கரு.கருப்பையா பேசுகிறார்.

    மதுரை

    முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணி யசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதையொ ட்டி நாள்தோறும் சன்னதி தெருவில் உள்ள கலையரங்கில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திர தினமான நாளை (5-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பட்டிமன்ற நடுவருமான மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு.கருப்பையா "கந்தன் கருணை" என்ற தலைப்பில் பேசுகிறார்.

    முன்னதாக திருப்பரங்குன்றம் வக்கீல் அழகுசுந்தரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இதையடுத்து இரவு 7 மணிக்கு பசுமலை ஜெயாலயா நாட்டிய பள்ளி கீதாபாலா கலைக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

    ×