search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீனத் பிரியா"

    • ஜீனத் பிரியா, முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • ராஜ்கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல என கூறினார்.

    நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    இதையடுத்து தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த பிரச்சனை சில மாதங்கள் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது.


    இந்நிலையில், தன் கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக ஜீனத் பிரியா அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நான் 2022-ஆம் ஆண்டு நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது அனைவரும் தெரிந்திருக்கும். ஆனால் நாங்கள் இப்போது பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமான திருமணம் இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்திற்கு பிறகு என் அப்பாவை நிறைய கஷ்டப்படுத்திவிட்டேன். அப்படி நான் கஷ்டத்தை கொடுத்தும் எனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது என்னை கைவிடாமல் என்னை காப்பாத்தினீர்கள். இது நான் எதிர்பார்த்திராத கருணை. என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா" என்று பேசினார்.


    • நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியா, முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
    • இவர் தன் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

    நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், 'பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    முனீஸ் ராஜா - ஜீனத் பிரியா

    இந்நிலையில், தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

    • நடிகர் ராஜ்கிரணின் மகளை தொலைக்காட்சி நடிகர் முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
    • பணம் பறிக்கும் நோக்கில் காதலித்து என் வளர்ப்பு மகளை டி.வி. நடிகர் அபகரித்துக்கொண்டார் என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

    நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து ராஜ்கிரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என் மகளை ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முகம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது.

     

    இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ''வளர்ப்பு மகள்'' என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்த பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

     

    அந்த நடிகரைப் பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள் என தெரியவந்தது. இதையெல்லாம் என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப் பெண்ணிடம் அழுது மன்றாடி, மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ''சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்'' என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தோம்.

     

    இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான ''லட்சுமி பார்வதியை'' பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப் பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. என் வளர்ப்புப்பெண், ஒரு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.

     

    ஆனால், தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.

    ×