search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம்"

    • ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் களுடன் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திட்ட பலன்கள் குறித்து எடுத்துரைக்கவும்,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள், ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    ×