search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளிக்கடை அதிபர்"

    ஈரோடு ஜவுளிக்கடை அதிபரை கடத்தி நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சித்தையன் (வயது 48). இவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாஸ்திரி நகர் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் சித்தையனை கடத்தி சென்றது.

    சித்தையன் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணத்தையும் 5 பவுன் நகையையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டது. அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த சித்தையன் இது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்த நாயக்கன்பட்டியை சேர்ந்த மதன்குமார் (42) என் பவரை கைது செய்தனர். பின்னர் மதன்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மதன்குமார் மீது ஏற்க னவே தாராபுரம், பழனி, திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதன்குமார் தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் உத்தரவுப்படி மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். #tamilnews
    சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    சென்னை:

    அண்ணாநகர் கிழக்கு 5-வது தெருவில் ஜவுளி கடை நடத்தி வருபவர் தேவதாஸ். இவர் நேற்று இரவு அண்ணாநகரில் உள்ள கிளப்புக்கு சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் சகோதரர் ராம், நண்பர் வினோத் ஆகியோரும் இருந்தனர். தேவதாஸ் ஆட்டோவின் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்.

    கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தேவதாஸ் வைத்திருந்த பையை திடீரென பறித்துச் சென்று விட்டனர்.

    அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த தேவதாஸ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தேவதாஸ் நகையுடன் வருவதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×