என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜவுளிகடை"
- ரூ.23 ஆயிரம் மற்றும் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருந்தது
- முக கவசம் கையுறை அணிந்து கைவரிசை காட்டியிருந்தது சிசிடிவி கேமராவில் பதிவு
கன்னிியாகுமரி :
நாகர்கோவில் அருகே உள்ள கலைநகர் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 27) இவர் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பிரபு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேஜையில் இருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பிரபு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் ஒருவன் தலையில் தொப்பியுடன் முககவசம் கையுறை அணிந்து பூட்டை உடை ப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 22 -ந் தேதி மணக்குடி பகுதியில் டாக்டர் வீட்டிலும் வாலிபர் ஒருவர் இதே போல் முக கவசம் கையுறை அணிந்து கைவரிசை காட்டியிருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
எனவே இந்த இரண்டு கொள்ளையிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையனாக இருக்கலாம் என்று போலீ சார் சந்திக்கிறார்கள். கொள்ளையனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.
- கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை
- கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்
நாகர்கோவில் :
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் பவின் (வயது 39).
இவர் தற்பொழுது நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் செட்டிகுளம் பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் மாயமாகி இருப்பதாக ஜோசப் பவின் தெரிவித்தார்.
கடையின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது.மர்ம நபர்கள் அதன் வழியாக கடைக்குள் புகுந்து துணிகளை திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.
கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அதில் கொள்ளையன் கடைக்குள் வருவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. கொள்ளையன் உடல் முழுவதையும் மூடி க்கொண்டு கடைக்குள் சுற்றித் திரிகிறான்.
அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்