search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று ஜவுளிகடையில் துணிகள் திருட்டு
    X

    நாகர்கோவிலில் இன்று ஜவுளிகடையில் துணிகள் திருட்டு

    • கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை
    • கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்

    நாகர்கோவில் :

    குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் பவின் (வயது 39).

    இவர் தற்பொழுது நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் செட்டிகுளம் பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் மாயமாகி இருப்பதாக ஜோசப் பவின் தெரிவித்தார்.

    கடையின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது.மர்ம நபர்கள் அதன் வழியாக கடைக்குள் புகுந்து துணிகளை திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அதில் கொள்ளையன் கடைக்குள் வருவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. கொள்ளையன் உடல் முழுவதையும் மூடி க்கொண்டு கடைக்குள் சுற்றித் திரிகிறான்.

    அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×