search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழவந்தான் பேரூராட்சி"

    • சோழவந்தான் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி மையமாக மாறியது.
    • முன்மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சாரால் விருது வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் நான்கு பேரூராட்சிகள் முன் மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பேரூராட்சியும் ஓன்றாகும். மேலும் முன்மாதிரி பேரூராட்சியாக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சாரால் விருது வழங்கப்பட்டதால் தென் தமிழகத்தில் திடக்கழிவு பற்றிய பயிற்சி மையமாக சோழவந்தான் பேரூராட்சி உருவாகி உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியா பட்டி, மல்லாங்கிணறு, சுந்தர பாண்டியம், மம்சாபுரம், சேத்தூர், செட்டியார்பட்டி, வத்திராயிருப்பு, வா.புதூர், கொடிக்குளம் உள்ளிட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி பட்டறை முகாம் பேரூராட்சிக்குட்பட்ட ஆண்டியமேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நடந்தது.

    முகாமிற்கு பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து விண்ட்ரோ முறையில் உரமாக்குதல் குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார். வளம்மீட்பு பூங்காவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இப்பயிற்சி முகாமில் பேரூராட்சி தலைவர்கள் கே.ஜெயராமன், துணை தலைவர் லதாகண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் கல்யா ணசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், குருசாமி, துப்புரவு மேற்பார்வை யாளர்கள் சுந்தராஜன் வினோத்குமார், எலட்ரீசியன், பாலமுருகன், சோணை, வெங்கடேசன், பூவலிங்கம், பாண்டி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    ×