search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோடச அபிஷேகம்"

    • 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும் நடைபெறுகிறது.
    • பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் தாணுமாலய சாமிகோவிலில் 18 அடி உயர முள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது.

    ஆஞ்சநேயருக்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடை பெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி

    22-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாரா தனை நடக்கிறது.

    23-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை யொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்ச நேயர் சுவாமிக்கு நல்லெண் ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சைபலசாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், மாதுளைச் சாறு உள் பட 16 வகையான பொருட் கள் அடங்கிய சோடச அபி ஷேகமும் நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு அலங் காரதீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராமபி ரானுக்கு புஷ்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆஞ்ச நேயர் சுவாமிக்கு புஷ் பாபிஷேகமும், 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு பிர சாதமாக லட்டு, பஞ்சாமிர் தம், விபூதி, குங்குமம் ஆகிய வற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகி றார்கள்.

    ×