search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொலிசிட்டர் ஜெனரல்"

    • சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3-வது முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • துஷார் மேத்தாவுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் இரு முறை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3-வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட உத்தரவில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதேபோல், உச்ச நீதிமன்றத்திற்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன், ஐஸ்வர்யா பதி ஆகியோருக்கும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. 

    ×