search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கோ வாலிபர்"

    • வெளியூரை சேர்ந்த 2 பேர் ரமேஷ் வீட்டு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
    • இதனை கண்ட ரமேஷ் அவர்கள் மீது நாயை ஏவி விட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிப்பாளையம், ஜன்னலாடா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தனது வீட்டில் செல்ல நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு தெருவில் செல்வோரை துரத்தி சென்று கடிப்பதற்கு பயிற்சி அளித்து வைத்திருந்தார்.

    தினமும் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கும் ரமேஷ் அந்த வழியாக யாராவது சென்றால் தனது நாயை ஏவி விட்டு துரத்திச் சென்று கடிப்பதை கண்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனால் ரமேஷ் வீட்டு வழியாக செல்வதற்கு பயந்து கொண்டு மாற்று வழியில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியூரை சேர்ந்த 2 பேர் ரமேஷ் வீட்டு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தனர். இதனை கண்ட ரமேஷ் அவர்கள் மீது நாயை ஏவி விட்டார்.

    ரமேஷின் செல்ல நாய் குரைத்தபடி அவர்களை துரத்திக் கொண்டு ஓடியது. நாய் துரத்தி வருவதைக் கண்ட அவர்கள் நாயிடம் சிக்காமல் இருக்க தலை தெறிக்க ஓடினர். இதனைக் கண்ட ரமேஷ் சிரித்தபடி ரசித்து மகிழ்ந்தார். இருப்பினும் நாய் வேகமாக சென்று ஒரு நபரை கடித்துவிட்டு மீண்டும் ரமேஷ் வீட்டிற்கு வந்தது.

    நாய் கடிபட்ட நபர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் இதுகுறித்து புச்சிரெட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வீர பிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டிற்குள் சென்றவர், தான் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.
    • வாலிபரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரமடை

    கோைவ மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது(வயது22). இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று சாகுல்ஹமீது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள தெருவில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் வெளியில் வந்து குழந்தைகளையே பார்த்து கொண்டிருந்தார்.

    சில நிமிடங்களில் என்ன யோசித்தார் என தெரியவில்லை. திடீரென வீட்டிற்குள் சென்றவர், தான் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.

    நேராக குழந்தைகள் விளையாடிய பகுதிக்கு சென்று அவர்கள் முன்பு நின்றார். இதனை அங்கு விளையாடிய சிறுவர், சிறுமிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அங்கிருந்து தங்களது வீட்டிற்கு ஓடிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் சிறுவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் நேராக மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சாகுல்ஹமீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×