search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் விபத்து"

    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, அவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சி கீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 27). போலீஸ் வேலைக்கு தேர்வான இவர், தர்மபுரி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி பெற்று வந்தார். 3 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நண்பர்களான இருவரும் பேளூர் பகுதியில் இருந்து கீரப்பட்டி நோக்கி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். கீரப்பட்டி பேருந்து நிறுத்தம் சண்முகம் தோட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(26). என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது பலமாக மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, அவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். அர்ஜுனன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பயிற்சி காவலர் உட்பட 2 பேர் பலியான சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×