search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மாவட்டத்தில்"

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.
    • றிப்பாக நேற்று வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

    பரவலாக மழை

    குறிப்பாக நேற்று வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகரில் இன்று காலை 5.30 மணி முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்ற வர்கள் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    33.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 9 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 8, ஆத்தூர் 3, ஆனைமடுவு 3, கரியகோவில் 3, ஏற்காடு 2.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 2, பெத்தநாயக்கன்பாளையம் 1, கரியகோவில் 0.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 33.9 மி.மீ. மழை பெய்துள்ளது.  

    ×