search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிக்கும் குடிநீர்"

    • ராமநாதபுரத்தில் சேமிக்கும் குடிநீரை மூடி வைத்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
    • சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக வீடுகளில் குடி நீரை கேன்கள், திறந்த நிலை டிரம்களில் பொது மக்கள் பிடித்து சேமித்து வருகின்ற னர். இதில் உருவாகும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந் தப் பகுதியில் சுகாதா ரத்து றையினர் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகின்றனர்.

    திறந்த வெளியில் தண் ணீரை சேமிக்க கூடாது, சேமிக்கப்படும் தண்ணீர் டிரம்களை மூடி பாதுகாப் பாக வைக்க வேண்டும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகாமல் தடுக்க வேண்டும் என்று வீடு, வீடாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறையால் வீடுகளில் சேமிக்கப்படும் குடிநீரால் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய பகுதிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகிறோம்.

    பரிசோதனைகளை உரிய முறையில் நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனை களில் கார்டுகளில் டெங்கு பரிசோதனை செய்யக் கூடாது. காய்ச்சல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    ×