search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதம் அடைந்து சாலை"

    • செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் மனோகரன் வரவேற்றார். கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.

    தலைவர் விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் முன்னாள் ராணுவத்தினர் ராமதாஸ் மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் தாய் செய் நல விடுதி கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் மோசமான நிலை ஏற்பட்டு பூட்டி போடப்பட்ட நிலையில் உள்ளது.

    மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவையாம்பிகை நகரில் மோசமான நிலையில் ரோடு சேதம் அடைந்து உள்ளதால் சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    சுடுகாட்டு பாதைக்கு செல்லும் தெருக்களில் மரங்கள் இடையூராக இருப்பதால் மரங்களை அப்புபடுத்தி இறந்தவர்களை எடுத்துச் செல்ல இடையூர்யில்லாமல் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமசபையில் பொது மக்களுடன் வலியுறுத்த ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கட்டமைப்பு பிரிவு முன்னாள் உதவி திட்ட அலுவலர் நக்கீரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத்த லைவர் உமாராணி நன்றி கூறினார்.

    ×