search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதமான சாலையை"

    • குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது
    • மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது


    நாகர்கோவில் : விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு பெரும் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே விஜய்வசந்த் எம்.பி., தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொ டர்பு கொண்டு சாலைகளை விரைவில் செப்பனிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் மக்கள் படும் சிரமங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். ஏற்கனவே குழித்துறை, மார்த்தாண்டம் பகுதியில் ஏற்பட்ட பெரிய பள்ளங்களை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் மற்ற இடங்களிலும் சாலைகள் செப்பனிடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×