search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்கள் பற்றாக்குறை"

    • மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அழைத்து செல்லப்படுகின்ற நிலை உள்ளது.
    • கூடுதலாக நியமிக்க பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஒகேனக்கல்,

    ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது.ஒகேனக்கல்லில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டம்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கும்போது குடிமகன்கள் குடித்து விட்டு வீசும் கண்ணாடி பாட்டில் இருந்தால் கால்களை கிழித்துவிடுகிறது. ஆற்றில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    அதே போன்று உள்ளூரில் வசிக்கும் மக்கள் தாங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஒகேனக்கல்லில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதால் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ மருத்துவமனையில் மருத்துவம் பார்த்ததற்கு செவிலியர்கள் இருப்பதில்லை என்றும், அதேபோன்று வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக வருவது வழக்கம்.

    மருத்துவமனைக்கு செல்லும் சாலை சுமார் 500 மீட்டர் தூரம் சரியில்லாமல் குண்டும் குழியுமாக அமைந்துள்ளது.

    இதனால் நிறைய கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுகின்றன

    இரவு நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் வரும்போது இரவுநேர செவி லியர்கள் இல்லாததால் தவிக்கின்றனர்.

    இதனால் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அழைத்து செல்லப்படுகின்ற நிலை உள்ளது.

    அவசர காலங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு வரும்போது கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் உரிய சிகிச்சையின்றி பாதிக்கப்படு வதாகவும்,உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது,

    ஒகேனக்கல் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இரவு பணியில் கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×