search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை என்ஜினீயர் மரணம்"

    • ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.
    • முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    காஞ்சிபுரம் நாகதீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை மாணிக்கம். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு மோகன்ராஜ், நவீன் (வயது 23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

    துரை மாணிக்கம் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் நேற்று காலையில் நெல்லை வந்தார். பின்னர் அவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று விட்டு, மாலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை அண்ணன் மோகன்ராஜ் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய நவீனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நவீன் உடலை தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நவீன் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் மகன் நீரில் மூழ்கி மாயமானதால் அவரது பெற்றோர் கரையில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் கண்கலங்க செய்தது.

    • சுரேஷ்குமார் உடை மாற்றி விட்டு வருவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வரவில்லை.
    • காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் புது மாப்பிள்ளை இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    வானூர்:

    சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 30) இவர் பி.இ. முடித்து சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த கோமதி (30) என்பவருக்கும் பெரம்பலூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது. கோமதி தற்போது கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நாளடைவில் இந்த காதல் இவர்களது வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே சுரேஷ் குமார்-கோமதியின் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் நேற்று காலை இவர்களது திருமணம் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நடந்தது.

    இதன் பின்னர் மாலையில் கோட்டக்குப்பம் தனியார் மண்டபத்தில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிலையில் மாப்பிள்ளை சுரேஷ்குமார் வீட்டார் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்தனர்.

    அப்போது சுரேஷ்குமார் உடை மாற்றி விட்டு வருவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுரேஷ் குமாரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் புது மாப்பிள்ளை இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×