search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகளுக்கு"

    • மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் வளர்ந்து உள்ளதால் இந்த மலைக்கு மருந்து வாழ்மலை என்று பெயர் வர காரணம் ஆயிற்று.
    • பிரதோஷம் போன்ற முக்கிய விசேஷ காலங்களில் இங்குள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே உள்ள பொத்தையடியில் அமைந்துள்ளது வைகுண்ட பதி கிராமம். இங்கு உலகப் புகழ்பெற்ற மருந்து வாழ்மலை என்னும் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் வளர்ந்து உள்ளதால் இந்த மலைக்கு மருந்து வாழ்மலை என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

    இந்த மலை சுமார் 1800 அடி உயரம் கொண்டதாகும். வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வ ரர் கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில் கள் அமைந்துள்ளன. மேலும் இந்த மலையில் பல குகைகளும் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான சித்தர்கள், முனிகள், ரிஷி கள், மகான்கள் தவமிருந்து வருகின்றனர். இந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    இந்த மலையில் ஆங் காங்கே சுனைகளும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இதனால் இந்த மலைக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், யாத்திரிகர்களும், பக்தர்களும் வந்து செல்கிறார்கள். மேலும் இந்த மலைக்கு மலை ஏறும் பயிற்சிக்காக மலையேற்ற வீரர்களும் அதிக அளவில் அதிகாலை நேரத்தில் வந்து செல்கிறார்கள். இது தவிர தேசிய மாணவர் படை வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சியும் இந்த மலையில் நடந்து வரு கிறது. பிரதோஷம் போன்ற முக்கிய விசேஷ காலங்களில் இங்குள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இந்த மலையில் செய்து கொடுக்கப்படவில்லை.

    குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இந்த மலையில் இல்லை. மேலும் இந்த மலையில் பாதி வரை தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையின் உச்சிக்கு செல்வதற்காக பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மலையேறும் பயிற்சியாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த மலைக்கு வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர், மின்விளக்கு, பாதை மற்றும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்க இந்த மலைக்கு வரும் பொது மக்களும், சுற்றுலா சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×