search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தளம்"

    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.

    அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    • சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும்மந்தாரமாக காட்சியளித்தது.
    • சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம்

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும்மந்தாரமாக காட்சியளித்தது.

    இதனால் பகல் முழு வதும் வெயிலையே பார்க்க முடியவில்லை. இடை இடையே சாரல் மழையின் தூரல் விழுத் தது. காலையில் மழை பெய்ததால் மழைமேகத்தின் காரணமாக சூரியன் உதய மாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாலையிலும் மேக மூட்டத்தின் காரணமாக சூரியன் மறையும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இந்த காட்சியையும் பார்க்க முடியாமல் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழை தூரலின் காரணமாக மாலையில் கடுமையான குளிர்காற்று வீசியது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கடற்கரையில் குளிர் வாட்டி வதைத்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுகளுக்கு திரும்பிச் சென்ற வண்ணமாக இருந்தனர். இரவு முழுவதும் கன்னியாகுமரியில் பனிப்பொழி வாகவே இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி முழுவதும் ஒரே பனி மூட்ட மாக காட்சி அளித்தது.

    சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

    ×