search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்று வட்டார பகுதி"

    • ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
    • புல் பூண்டுகள் நீர் மட்டத்தில் உயர்ந்து சாலை மட்டத்தை எட்டியுள்ளது.

    குளச்சல் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்றிரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குளச்சல் சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழையால் குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் பெருகி கரைபுரண்டு ஓடுகிறது. காந்தி சந்திப்பு முதல் பீச் சந்திப்பு வரை சாலையை மூழ்கடித்து வெள்ளம் ஓடியது.

    இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமடைந்தனர்.வெள்ளியாகுளம் நிரம்பி உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாததால் வளர்ந்துள்ள செடிகள், புல் பூண்டுகள் நீர் மட்டத்தில் உயர்ந்து சாலை மட்டத்தை எட்டியுள்ளது. ஆசாத் நகர் வடிகால் நிரம்பி சாலையை மூழ்கடித்து சென்றது.

    இதனால் மழை வெள்ளம் அருகில் உள்ள ஜூம்மா பள்ளி வாசலுக்குள் புகுந்தது. இந்த வெள்ளம் இன்று காலை வடியாததால் தொழுகைக்கு இடையூறு ஏற்பட்டது.நிர்வாகிகள் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மழைக்காலங்களில் பெரு வெள்ளம் இந்த பள்ளி வாசலுக்குள் புகுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.எனவே ஆசாத் நகர் வழியாக பாய்ந்தோடும் மழை வெள்ளம் ஏ.வி.எம்.கால்வாய் வழியாக கடலில் சேர ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    ×