search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றிதிரியும் கரடி"

    • உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களை நோக்கி வருகின்றன.
    • கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகளாக காணப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது தொடர்ந்து வனங்களை விட்டு வெளியே நகர்புறங்களை நோக்கி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி காமராஜர் சதுக்க பகுதியில் ஒற்றை கரடி சுற்றியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகப்படியாக கரடிகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×