search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில்"

    • 5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது.
    • மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா நாளில் இரவு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7-ம் திருநாளான நேற்று இரவு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.

    9-ம் திருவிழா நாளான நாளை (5-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன.

    முன்னதாக 3 சாமிகளும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்களுக்கு எழுந்தருளு கின்றனர்.தொடர்ந்து தீபா ராதனை நடைபெற்றதும் தேர்கள் இழுக்கப்படு கின்றன. மாலையில் மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தரு ளுகிறார்.

    இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் நாள் நிறைவு விழாவில் காலை 10 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலா, இரவில் ஆராட்டு போன்றவை நடக்கிறது.

    ×